Vettri

Breaking News

ஆலையடிவேம்பில் தமிழரசு தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு




 ( வி.ரி.சகாதேவராஜா)

இலங்கை தமிழரசுக் கட்சியின் 
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான ஆலையடிவேம்பு 4ஆம் வட்டாரத்துக்கான வேட்பாளர் சா.ஸ்ரீஸ்கந்தராஜாவின் பிரச்சாரக் காரியாலயம் நேற்று  (23) புதன்கிழமை மாலை  ஆலையடிவேம்பு வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்லில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு கிளைத் தலைவர் எம்.ஜெகநாதன்( குமார்) கலந்து சிறப்பித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.





















No comments