சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயக முன்னணி (NDF) கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட 3 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்
இதனையடுத்து, சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒரு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் 05 மில்லியன் ரூபா இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய இரு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments