விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஓலோ என அழைக்கப்படும் புதிய நிறம்
அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் ஓலோ என அழைக்கப்படும் புதிய நிறத்தை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை நேரடி விழித்திரை தூண்டுதல் மூலம் மட்டுமே உணர முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மனித காட்சி உணர்தல் மற்றும் வண்ண அறிவியல் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக இந்த கண்டுபிடிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சிக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரென் என்ஜி தலைமை தாங்கியுள்ளார்.
அவர் இந்த வளர்ச்சியை அறிவியல் உலகில் குறிப்பிடத்த மைல்கல் என குறிப்பிட்டுள்ளார்.
இது விழித்திரையில் உள்ள தனிப்பட்ட ஒளிச்சேர்க்கை செல்களுக்கு நேரடியாக துல்லியமான ஒளி துடிப்புகளை வழங்குவதை உள்ளடக்கியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதாரண வண்ண பார்வை கொண்ட ஐந்து பங்கேற்பாளர்கள் லேசர் அடிப்படையிலான விழித்திரை தூண்டுதலைப் பயன்படுத்தி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, இயற்கையான பார்வையில் காணப்படாத ஒரு தனித்துவமான நீல-பச்சை நிறத்தை அனைவரும் கண்டு பிடித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய நிறத்திற்கு ஓலோ என்று பெயரிட்ட நிலையில், மேலும் பாரம்பரிய திரை அல்லது நிறமி அடிப்படையிலான காட்சிகள் மூலம் அதை மீண்டும் உருவாக்க முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
கூம்பு தூண்டுதலை தனிமைப்படுத்தும் ஓஸ் அமைப்பின் திறன், மனித வண்ண உணர்வின் நீண்டகால வரம்புகளை புதிய கோணத்தில் பார்க்க உதவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும் ஆரம்பகால சோதனை நிலைகளில் இருந்தாலும், இந்த கண்டுபிடிப்பு ஒளியியல், நரம்பியல் மற்றும் காட்சி தொழில்நுட்பத்தில் நீண்டகால அளவில் நன்மை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments