Vettri

Breaking News

சிட்னியில் " ஒஸ்காரின்" சித்திரைத்திருவிழா




 வி.ரி. சகாதேவராஜா)


'ஒஸ்கார் "அமைப்பின் 2025ம்  ஆண்டுக்கான  விசுவாவசு சித்திரை கலாசார விளையாட்டுவிழாவும் ஒன்றுகூடலும்   சிட்னி நகரில்  நேற்று  சனிக்கிழமை  கோலாகலமாக  நடைபெற்றது.

அவுஸ்திரேலியாவில் வதியும் காரைதீவு மக்களது அமைப்பான "ஒஸ்கார்"(AusKar) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் (ராஜன்) தலைமையில் இவ்வாண்டு நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

கலாசார நிகழ்வுகளில் வரிசையில் மிட்டாய் பை ஓட்டம்,  பலூன் காலில் கட்டி உடைத்தல் ,சாக்கு ஓட்டம்  ,தேசிக்காய் ஓட்டம் , பணிஸ் உண்ணல் ,முட்டி உடைத்தல் ,சங்கீத கதிரை, கயிறிழுத்தல் முதலான சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் வகையிலான நிகழ்வுகளும்  இனிதே நடைபெற்றது .

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

 ஒஸ்கார் அமைப்பின் செயலாளர் தி.லாவண்யன் , பொருளாளர் வீ.விவேகானந்தமூர்த்தி உள்ளிட்ட ஒஸ்கார் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் குடும்பங்கள் கலந்து கொண்டனர்.













No comments