Vettri

Breaking News

தந்தை செல்வாவின் நினைவு தினம் நேற்றையதினம் திருக்கோவில் பிரதேசத்தில் அனுஷ்ரிக்கப்பட்டது....




 ஜே.கே.யதுர்ஷன்


இலங்கை தமிழரசு கட்சியின் திருக்கோவில் மேற்கு வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் ஈழத்து காந்தி என உலகத்தமிழர்களால் போற்றப்பட்டுவரும் இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவருமான இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவருமான தந்தை செல்வா எனும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் 48வது நினைவு தினம் காயத்திரிகிராமத்தில் திருக்கோவில் மேற்கு வட்டாரக்கிளை05 இன் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்றது...

இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கவீரந்திரன் கோடிஸ்வரன் அவர்களும் தமிழரசு கட்சின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்...


மேலும் இவ் நினைவு தின நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன்  அவர்கள்  தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார் அவத்துடன் கலந்து கொண்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தினர்...





No comments