Vettri

Breaking News

சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு விரைவில் ஸ்தாபிக்கப்படும் -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய!!




 சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு விரைவில் ஸ்தாபிக்கப்படும்.  என்றும் அதற்காக அரசியலமைப்பு பேரவைக்கு   நியமன பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில்  தெரிவித்தார்.

அத்துடன் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான சட்டங்கள் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மீதான  குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”சுதந்திரத்துக்குப் பின்னராக 75  வருட காலத்தையும் நாம் விமர்சிக்கவில்லை. அரசியல் கட்டமைப்பையே  சாபம் என்ன கூறுகின்றோம். இலவச கல்வி மற்றும் இலவச சுகாதாரம் ஆகியவற்றால்  பெண்கள் முன்னேற்றமடைந்துள்ளார்கள். ஆசிய வலய நாடுகளில் இலங்கையின் பெண்களின் கல்வித் தரம் முன்னணியில் உள்ளது.

பாரிய போராட்டத்தின் மத்தியில் தான்  இலவச கல்வி உரிமை பெற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக பெண்கள் போராடி இன்று  சகல துறைகளிலும் பெண்கள். முன்னணியில் உள்ளார்கள். இந்த முன்னேற்றத்தை பலப்படுத்த வேண்டும்.

கல்வித்துறையை பொறுத்தவரையில் தற்போது  ஆண்களின்  கல்வி நிலை  பின்னடைவாகியுள்ளதை  அவதானிக்க  முடிகிறது. இது பாரிய பிரச்சினையாகும்.

கல்வித்துறையின் ஊடாகவே ஆண் – பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்த முடியும். ஆகவே ஆண்களின் கல்வி நிலை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.

.மகளிர் மற்றும்  சிறுவர்களின்  நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் விசேட முன்மொழிவுகள்  முன்வைக்கப்பட்டு நிதி  ஒதுக்கப்பட்டுள்ளன. சிறந்த  கலாசாரத்தை உருவாக்குவதன்  ஊடாகவே ஆண்- பெண் சமத்துவ நிலையை மேம்படுத்த முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments