பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை!!
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.0ஆக பதிவானதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சுனாமி ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை
No comments