Vettri

Breaking News

தனியார் வைத்தியசாலை உரிமையாளர்களுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலந்துரையாடல்




 நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்தியத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகளின் சேவைகளை மதிப்பீடு செய்து பொதுமக்களுக்கு இலகுவான இணைந்த சேவையினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனுக்கும், தனியார் வைத்தியசாலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது.

இதன்போது கண் சத்திர சிகிச்சை உள்ளிட்ட நோய்கள், விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகள், வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் அவர்களும் கலந்து கொண்டார்.




No comments