Vettri

Breaking News

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை கூட்டம்!!




ஏ.எஸ்.எம்.அர்ஹம்

அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இன்று (10.03.2025)ல்  ஒலுவில் கிறீன் வில்லா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் (PC), ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். உதுமாலெப்பை, கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீ.சமால்தீன், உயிர் பீட உறுப்பினர் சப்றாஸ் , பொத்துவில், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் சம்மாந்துறை,மாவடிப்பள்ளி,நாவிதன்வெளி,மாளிகைக்காடு,இறக்காமம்,வரிப்பத்தான்சேனை ஆகிய பிரதேச உச்ச பீட உறுப்பினர்கள், மத்திய குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.




No comments