நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட கலந்துரையாடல்!!
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் அம்பாரை மாவட்ட தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிஸாம் காரியப்பர் (PC) அவர்களின் தலைமையில் 09.03.2025 ஆம் திகதி ஒலுவில் கிறீன் வில்லா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் பிரதித் தலைவர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.I.M.மன்சூர், சிரேஷ்ட சட்டத்தரணி S.M.A.கபூர், கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீ.சமால்தீன், உயர் பீட உறுப்பினர் சப்றாஸ் , அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேச உச்ச பீட உறுப்பினர்கள், மத்திய குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments