Vettri

Breaking News

ஒஸ்கார் அமைப்பின் 15 வது வருடாந்த பொதுக்கூட்டம்! மீண்டும் ஏகமனதாக ராஜன் தலைவராக தெரிவு!




(  வி.ரி.சகாதேவராஜா)

அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தின்  (ஒஸ்கார் AusKar) 15 வது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று (2) ஞாயிற்றுக்கிழமை மாலை சிட்னியில் நடைபெற்றது.

அவுஸ்திரேலியாவிலுள்ள காரைதீவு மக்களின் இவ் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் தலைவர் கந்தசாமி பத்மநாதன்( ராஜன்) தலைமையில் நடைபெற்றது.

அக் கூட்டத்தில் 2025காலகட்டத்தில் AUSKAR செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கு ஒரு புதிய செயற்குழு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

AusKar அரசியலமைப்பின் படி,
தலைவர் கந்தசாமி பத்மநாதன் தற்போதைய குழுவை அதிகாரப்பூர்வமாக கலைத்தார்.

பின்னர் சகல பொறுப்புக்களையும் ஒப்படைத்து
புதிய தெரிவை ஆரம்பிக்க,  ஒஸ்கார் ஆலோசகரும் சிட்னி உதயசூரியன் மாணவர் நலன்புரி அமைப்பின் ஸ்தாபகருமான நாகமணி குணரெட்ணத்திடம் கையளித்தார் .

பின்னர் ஆலோசகர் நாகமணி குணரெத்தினம் தலைமையில் புதிய தலைவர் உள்ளிட்ட
2025 க்கான புதிய செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர்: பத்மநாதன் கந்தசாமி
உப தலைவர்: மகேந்திரன் அரசரட்ணம்

செயலாளர்: லாவண்யன் திருச்செல்வம்
உதவிச் செயலாளர்: பிரதீபராஜ் ரட்ணசிங்கம்

பொருளாளர்: விவேகானந்தமூர்த்தி வீரக்குட்டி
உதவிப் பொருளாளர்: விஜய் வினாயகமூர்த்தி

கணக்காய்வாளர் : குகதாசன் பேரின்பமூர்த்தி

ஆசிரியர் : சஞ்சீவ்
விவேகானந்தன்

செயற்குழு உறுப்பினர்கள்:

* பாலச்சந்திரன் சோமசுந்தரம்

* லோகேஸ்வரன் சிவபுண்ணியம்

* வீரக்குட்டி சத்தியமூர்த்தி

* கணேசநாதன் தம்பியப்பா

* கோவிந்தராஜ் ரத்னசிங்கம்

* திருக்குமரன் வெற்றிவேல

* சனாதனன் கமலநாதன்


நாடுகளுக்கான இணைப்பாளர்கள்.

* செந்தில்ரூபன் தங்கவேல்

* சமிந்தன் சிவானந்தம்

* ஜனனி ஹட்சன்

போஷகர்கள்:

* குணரெட்ணம் நாகமணி

* பிரகதீஸ்வரர் தங்கராஜா

* சிவசுப்பிரமணியம் வேலுப்பிள்ளை


அனைத்து தெரிவுகளும் ஏகமனதாக நடைபெற்றது.

புதிய தலைவர் கந்தசாமி பத்மநாதன் (ராஜன்) கருத்துரைக்கையில்..
AusKar இன் ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மை மிக முக்கியமானது, மேலும் நமது அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையின் கொள்கைகளை நாம் நிலைநிறுத்துவது கட்டாயமாகும்.

கடந்த ஆண்டு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல உதவியாக இருந்த அணிக்கு நன்றியும் பாராட்டுகளும்.  
"ஒற்றுமையே நமது பலம்"
உங்கள் பங்கேற்பிற்கும் ஆதரவிற்கும் அனைவருக்கும் நன்றி. என்றார்.

குழுக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
• AusKar குடும்பத்தில் சேரும் புதிய உறுப்பினர்கள் சமூக வேலைத்திட்டங்களில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
பொறுப்பான பதவிக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு AusKar இன் செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும்.
இது அவர்களுக்கு சமூகத்தின் மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள உதவும்,
மேலும் திறம்பட பங்களிக்க உதவும்.
• AusKar இன் மனிதவளத்தைத் தக்கவைத்து அதன் திறன்களை மேம்படுத்த, ஒரு மென்மையான அணுகுமுறை இருக்கும்.
சாதாரண வழிமுறை மூலம் தவறான புரிதல்களைத் தீர்க்க ஏற்றுக்கொள்ளப்பட்டது.
• ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த, ஒரு வெளிப்படையான அணுகுமுறை திறந்த நிலையில் பராமரிக்கப்படும் .
விவாதங்கள் மற்றும் வழக்கமான மாதாந்தர கூட்டங்கள் சுமூகமான மற்றும் கூட்டு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்
• ஒரு நேர்மறையான சூழல் வளர்க்கப்படும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் மதிப்பளித்து வாய்ப்புகளை வழங்கும்
AusKar இன்  வளர்ச்சிக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும்.





No comments