தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அரவிந்த ஸ்ரீநாத !!
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அரவிந்த ஸ்ரீநாத நியமிக்கப்பட்டுள்ளார்.
அரவிந்த ஸ்ரீநாத தனது கடமைகளை புதன்கிழமை (26) அன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பிரிவில் பட்டம் பெற்ற இவர், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவராவார்.
அரவிந்த ஸ்ரீநாத, இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் கற்றுள்ளதுடன், பல தனியார்த் துறை நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார்.
No comments