சரக்குக் கடைகள் மற்றும் சிறிய சுப்பர் மார்க்கட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!
பாறுக் ஷிஹான்
சரக்குக் கடைகள் மற்றும் சிறிய சுப்பர் மார்க்கட்களில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்கர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபா 20000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் ஆலோசனைக்கமைய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் புதன் கிழமை (19)சம்மாந்துறை புற நகர் பகுதியில் பல சரக்குக் கடைகள் மற்றும் சிறிய சுப்பர் மார்க்கட்களில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக தொடரப்பட்ட 3 வழக்குகளில் ருபா 20000 ( 10000-5000-5000 ) தண்டப்பணம் அறவீடு செய்யப்பட்டது.சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வர்த்தகர்களுக்கு மொத்தமாக ரூபா 20000 தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன் போது Color code இடப்படாத உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கப்பட்டது.எதிர் வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு மக்களுக்கு சிறந்த உணவுப் பொருட்களை வழங்கும் பொருட்டு தொடர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகின்றன.
No comments