வாடகை வீட்டு பிரச்சினை; கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கொலை!!
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்தனர்.
வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், இறந்த நபர் கணவன் மனைவி ஆகிய இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து கணவன் இறந்தவரின் கையில் இருந்த கூரிய ஆயுதத்தைப் பறித்து, இறந்தவரைத் தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபரும் அவரது மனைவியும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments