எந்தவொரு மாணவரும் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது ;பிரதமர் ஹரிணி அமரசூரிய!!
எந்தவொரு மாணவரும் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு நேற்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறந்த கல்விக்கான ஒரு மையமாக விளங்குகிறது.சமூகத்தில் சிறந்த கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது.
No comments