Vettri

Breaking News

கல்முனை வலயத்திற்கான இலவச சீருடை மற்றும் இலவச பாடநூல் விநியோகம்.!






(நூருல் ஹுதா உமர்)

புதிய அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்முனைக் கல்வி வலயத்திற்கான இலவச சீருடை மற்றும் இலவச பாடநூல் வழங்கும் வைபவ ரீதியான நிகழ்வு பாடசாலையின் முதல்வர் ஏ.ஜி.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் (24) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ .ஜாபீர் மற்றும் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி யூ.எல்.றியால் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments