Vettri

Breaking News

பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!!




 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று மட்/பட்/பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்திலே கோலாகலமாக நடைபெற்றது.  இம்முறை அதிகமாக 41 மாணவர்கள் தரம் 1 இற்கான அனுமதியினைப் பெற்றிருந்தார்கள். கடந்த 10 வருடத்தில் மிகக் கூடியதொரு அதிகரிப்பாக காணப்படுகின்றது.

 அத்தோடு இதற்காக சிறப்பாக செயற்பட்ட அதிபர், ஆசிரியர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்கள். இம் முறை மட்/பட்/பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்திலே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 20 மாணவர்கள் தோற்றி அதில் 10 மாணவர்கள் புலமைப்பரிசிலுக்கு தகைமை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த வகையில் 50 வீதமான மாணவர்கள்  புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments