Vettri

Breaking News

எரிப்பின் போது முழு முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து வீதியில் இறங்கிப்போராடியது எம்முடன் தமிழ், சிங்கள சகோதரர்கள் இணைந்து போராடினார்கள்.




தெற்காசியாவின் செல்வந்தக்கட்சித்தலைவர் அநுர : கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன செய்தார்? 

( அஸ்ஹர்  இப்றாஹிம்)

சஜித் தொடர்பாக முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தி அனுரகுமார செய்யும் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (1)  தெரிவித்தார்.

மூதூரில்  இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
அண்மையில் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் அனுரகுமார திசாநாயக்க  சஜித் பிரேமதாச தொடர்பாக சிறுபிள்ளைத்தனமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

திகன, மினுவாங்கொடை கலவரங்களின் போது சஜித் பிரேமதாச என்ன செய்தார்? எனக்கேட்டிருந்தார். ஆனால், ஜனாஸா எரிப்பின் போது சஜித் என்ன செய்தார்? என்று அவர் கேட்கவில்லை. அவரால் அதை கேட்கவும் முடியாது.

சஜித் பிரேமதாச அந்த நேரம் என்ன செய்தார்?, அனுரகுமார திசாநாயக்க என்ன செய்து கொண்டிருந்தார்? என்று நான் கூறுகிறேன். அச்சம்பவம் இடம்பெற்ற போது சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ எதிர்க்கட்சி தலைவரோ அல்லது உங்களைப்போன்று ஒரு கட்சியின் தலைவரோ அல்ல. அவர் வீடமைப்பு அமைச்சர் மாத்திரமேயாகும்.

அக்கலவரங்களில் பாதிக்கப்பட்ட மினுவாங்கொடை, குருநாகல் பிரதேச 21 பள்ளிவாயல்களின் புனர்நிர்மாணத்துக்கு சஜித் பிரேமதாச அவர்களே நிதியுதவி செய்திருந்தார். அந்நிகழ்வுகளில் சஜித் பிரேமதாசவுடன் நானும் முஜிபுர்ரஹ்மானும் கலந்து கொண்டிருந்தோம். அதன் பின் பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் இது தொடர்பாக நானும் முஜிபுர் ரஹ்மான், மரைக்கார் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே குரலெழுப்பியிருந்தோம். 

தெற்காசியாவின் செல்வந்தக்கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க கலவரங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு ரூபா வழங்கியிருப்பாரா? ஜனாஸா 


அப்போது எங்கே சென்றார் இந்த அனுர குமார திசாநாயக்க ? ஆனால், முஸ்லிம்களோடு அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒன்றாக இருந்தவர் சஜித் பிரேமதாச மட்டுமே.
யாரையும் விமர்சனம் செய்யலாம். ஆனால், அதில் சிறிதளவாவது உண்மை இருக்க வேண்டும். விமர்சனம் செய்ய முன் உங்களையும் சுயவிமர்சனம் செய்து விட்டு விமர்சிக்க வேண்டும். ஆகவே, முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து பொய்களைக்கூறி முஸ்லிம் இளைஞர்களைத்தூண்டி விடுவதை அனுரகுமார திசாநாயக்க நிறுத்த வேண்டும்.

விமல் வீரவன்ச மக்கள் விடுதலை முன்னணியூடாக அரசியலுக்கு வந்த அக்கட்சி கொள்கையை உடைய ஒருவர். அவ்வாறான கொள்கையுடையவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதற்கு விமல் வீரவன்சவே சிறந்த உதாரணம் எனத் தெரிவித்தார்.

No comments