Vettri

Breaking News

வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்!!




 வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் பதவியேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.


இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பொறுப்பேற்று நிலையில்,  தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவை இன்று(24)  பொறுப்பேற்றுள்ளது.

அதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக பணியாற்றிய பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை  நேற்றையதினம்(23) இராஜினாமா செய்துள்ளதாக  வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மாகாண ஆளுநர்களுக்கான புதிய நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

அந்தவகையில், வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments