Vettri

Breaking News

இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைப்பு!




 பாராளுமன்றத்தை இன்று (24) நள்ளிரவு முதல் கலைக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதுடன், அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


No comments