Vettri

Breaking News

பொருளாதாரம் ஸ்திரப்படும் வரை நிவாரணப் பொதி- அனுரகுமார திஸாநாயக்க!!




 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரம் ஸ்திரப்படும் வரை நிவாரணப் பொதியொன்று வழங்கப்படும் என அதன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொட்டாவ நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.​

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

“நம் நாட்டின் ஏராளமான குடிமக்கள் தங்கள் போக்குவரத்துத் தேவைகளுக்காக அதிகச் செலவுகளைச் செய்கிறார்கள்.

எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும்.

முதல் பட்ஜெட்டிலேயே உணவு மீதான வாட் வரியை நீக்குவோம்." என்றார்.


No comments