Vettri

Breaking News

தேசிய மட்டத்தில் மல்யுத்த போட்டியில் மகிழடித்தீவு மாணவன் பவிசனன் சாதனை!!





(  வி.ரி. சகாதேவராஜா)

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மல்யுத்தப் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட 
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய மாணவன் ம. பவிசனன் 3 வது இடத்தை பெற்று 
வெண்கலப் பதக்கத்தினை தனதாக்கிக்கொண்டார். 

அண்மைக்காலமாக மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய ரீதியில் பதக்கங்களை பெற்று வந்துள்ளது என்று 
வித்தியாலய அதிபர் செ.ஜமுனாகரன் தெரிவித்தார்.

தனது கன்னி முயற்சியில் தேசிய ரீதியில் இம் மாணவன் சாதித்திருப்பது எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை இம் மாணவன் படைப்பான் என்பதையே பறைசாற்றுகிறது என வித்தியாலய சிரேஸ்ட ஆசிரியை திருமதி நளினி அகிலேஸ்வரன் தெரிவித்தார்.

இம் மாணவனை  தேசியத்தில் சாதிக்க வழிசமைத்த பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நி.நிசோத் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கை.தெய்வேந்திரகுமார்  ஆகியோருக்கும் பாடசாலையின் விளையாட்டுத்துறைசார் வளர்ச்சியில் பக்கபலமாக இருக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட வலய கல்வி அதிகாரிகள் உடற்கல்வி பாடத்துறைக்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் ஆகியோர்களுக்கும் பாடசாலையின் கல்விச் சமூகத்தினர் நன்றியினை தெரிவிக்கின்றனர்.

No comments