Vettri

Breaking News

ஞாயிறன்று திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!!





( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை சமுத்திர தீர்த்தோற்சவம்
ஞாயிற்றுக்கிழமை 04ஆம் தேதி காலை நடைபெறவிருக்கிறது.

இந்த உற்சவம் கடந்த 18 நாட்கள் பகல் இரவுத் திருவிழாக்களாக நடைபெற்று வருகிறது .

 நான்காம் (04)தேதி தீர்த்த உற்சவத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக  ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தெரிவித்தார் .

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் தலைமையில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

பிதிர்க்கடன் செலுத்துகின்ற ஆடி அமாவாசை உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதற்காக  முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தீர்த்தம் அன்று  பிதிர்க்கடன் செலுத்துகின்றவர்களுக்கு வசதியாக  சிவாச்சாரியார்களை உள்ளடக்கி பிதிர்க்கடன் நிறைவேற்றுகின்ற வேலை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments