Vettri

Breaking News

இலஞ்சம் பெற்ற போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது...




திருகோணமலை வான்எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பணமாக இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார். 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரஜ எல, கந்தளாய் எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட 45 வயதுடையவர் என இலஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டார். 


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்தெரியவருவதாவது,


கடந்த 15 ஆம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை கடமை நேரத்தில் பரிசோதித்த போது உரிய ஆவணங்கள் இன்மையால் இலஞ்சமாக ரூபாய் 10,000.00 கேட்டிருந்தார் உடனடியாக ரூபா 5,000.00 கொடுத்து விட்டு மீதி தொகையான 5,000.00 ரூபாழவ நேற்று மாலை 7.20 க்கு கொடுக்கும் போது இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


குறித்த சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



No comments