திருகோணமலையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் கைது
திருகோணமலை (Trincomalee) - சேனையூர் ஆறாம் வட்டாரத்தில் சட்டவிரோத மதுபானங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (19) சம்பூர் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் நீண்ட காலமாக இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தொடர்ச்சியான தகவலின் அடிப்படையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மதுபான விற்பனை
இந்த நிலையில், குறித்த பெண்ணிடம் இருந்து 6 பியர் ரின்களும், இரண்டு சாராய போத்தல்களும் ஒரு கசிப்பு போத்தலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றில் முன்னிலை
இதனையடுத்து சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அனுமதி இல்லாத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை போன்ற இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும் கைது செய்யப்பட்ட பெண்ணையும் இன்று (19) மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments