Vettri

Breaking News

இன்று சஜித் கலந்துகொள்ள இருந்த எட்டு கூட்டங்கள் அம்பாறையில் ரத்து!!!





( வி.ரி.சகாதேவராஜா)

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் கலந்துகொள்ள இருந்த  எட்டு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சக்வெல வேலைத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பாடசாலைகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஸ்மார்ட் அறைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகளே இவ்விதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாசாவின் இணைப்பாளர் வி. வினோகாந்த்  ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
முன் கூட்டியே இந் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளுக்கமைவாக இந் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது.

அதாவது தேர்தல் ஆணையகத்தினால் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பிற்பாடு இத்தகைய நிகழ்வை நடத்துவது பொருத்தமற்றது என்ற காரணத்தினால் இது ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

 அம்பாறையில் இருந்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்ற முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏழை  மாணவர்களுக்காக இத்தகைய கல்வி உதவி வழங்கப்பட இருந்த இந்த நிகழ்வு நிகழ்வை தடை செய்தவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால் இந்த கல்வியின் தலைவிதி எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்று தெரியாது .இருந்த பொழுதிலும் தேர்தல் நடைமுறை விதிகளுக்கு அமைவாக இந்நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார்.

No comments