Vettri

Breaking News

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்துள்ள இலங்கையர்




 இத்தாலியில்(Italy) ஆற்றில் மூழ்கி இலங்கை பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியிலுள்ள பிரிந்தா ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராட சென்றபோதே குறித்த இலங்கைப் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் ரமேஷ் கணேகெடெர என்ற 23 வயதுடைய இலங்கையரே உயிரிழந்துள்ளார்.இதன்போது ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த இலங்கை பிரஜையை காப்பாற்றுவதற்காக சென்ற ருமேனிய பிரஜையும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்துள்ள இலங்கையர் | Sri Lankans Drowned In Italy Police Investigation

உயிரிழந்த இலங்கை இளைஞன் உதைபந்தாட்ட வீரர் எனவும், அவரை காப்பாற்ற முற்பட்ட வேளையில் உயிரிழந்த ருமேனிய வீரர் மல்யுத்த வீரர் எனவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இளைஞர்களின் சடலங்களை மீட்டுள்ளனர். உயிரிழந்த இலங்கையர் இத்தாலியின் பதுவாவில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments