Vettri

Breaking News

தேங்காய்க்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை




 நாட்டில் எதிர்காலத்தில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாமென தெங்கு செய்கையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வெள்ளை ஈ தாக்கம் காரணமாக புத்தளத்தில் சுமார் 5000 ஏக்கர் தெங்கு செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை ஈ தாக்கம்

புத்தளம் (Puttalam) மாவட்டத்தில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு வெள்ளை ஈ நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதால் தாம் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேங்காய்க்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | 5000 Acres Of Coconut Plantation Distorted

உரிய அதிகாரிகள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால், தேங்காய்க்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படலாமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

No comments