Vettri

Breaking News

நாட்டின் பல இடங்களில் இன்றும் பலத்த காற்று!!




 நாட்டின் பல இடங்களில் இன்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments