Vettri

Breaking News

உயரம் பாய்தல் போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவான மாணவன் சுஜேஸ்!!




செ.துஜியந்தன்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 14 வயதுக்கு ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் சாம்பசிவம் சுஜேஸ் வலய மட்டத்தில் முதலாம் இடம் பெற்று மாகாண மட்ட த்துக்கு தெரிவாகியுள்ளார்.

இவர் கடந்த 2023  இல் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் மாகாண மட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments