Vettri

Breaking News

அத்துமீறி நுழைந்த 9 இந்திய மீனவர்கள் கைது!!




 நாட்டின் கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் இரண்டு விசைப்படகுகளுடன் 09 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.


இலங்கை, இந்திய சர்வதேச கடல் எல்லைக்கும் நெடுந்தீவுக்கும் இடையே நேற்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை 02 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களையே படையினர் கைது செய்தனர். இவர்களது இரண்டு விசை படகுகளையும் படையினர்  கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்ட பின் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட் டனர்.

விசாரணைக்கு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டுமென, இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments