Vettri

Breaking News

காட்டுப்பாதை ஊடாக 14110 பேர் பயணம் செய்துள்ளனர்





செ.துஜியந்தன்


கதிர்காமம் காட்டுப்பாதை ஊடாக இதுவரை 14110 பேர் பயணம் செய்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


கதிர்காமம் கொடியேற்றத் திருவிழா 6 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி 22  ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் காட்டுவழிப் பாதை ஊடாக கதிர்காமக் கந்தனை தரிசிக்க பாதயாத்திரை யில் ஈடுபட்டுள்ளனர். 


கடந்த 30 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் உகந்தை மலை முருகன் ஆலயம் ஊடாக செல்லும் காட்டுவழிப் பாதை திறந்து வைக்கப்பட்டது.  இப் பாதையானது எதிர்வரும் 11 ஆம் திகதியன்று மீண்டும் மூடப்படவுள்ளது.  இம் முறை அதிகளவிலான பக்தர்கள் காட்டுப் பாதை ஊடாக பாதயாத்திரை யில் ஈடுபட்டுள்ளனர்.  காட்டுப்பாதை திறக்கப்பட்டு கடந்த ஐந்து நாட்களில் 14110 பேர் பயணம் செய்துள்ளனர். இனி வரும் இன்னும் ஆறு நாட்களில் இதைவிட அதிகளவிலான பக்தர்கள் காட்டுப் பாதையூடாக பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  


வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து உகந்தை முருகன் ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தந்தவண்ணமுள்ளனர்.  காட்டுப் பாதையில் பயணிப்பவர்களுக்கு தொண்டர் அமைப்புக்கள் குடி நீர் வசதி சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments