Vettri

Breaking News

பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு தினங்களில் 10 கோடி ரூபாய் இழப்பு!!!




 பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு தினங்களில் புகையிரத திணைக்களத்திற்கு ஏறக்குறைய 10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (11) தெரிவித்தார்.

சாதாரண நாளில் ரயில்வே துறையின் பயணிகள் போக்குவரத்து டிக்கெட் வருமானம் 4 கோடி ரூபாயாகும். அந்த வருவாயுடன் சரக்கு உள்ளிட்ட இதர வருவாயையும் சேர்த்தால் தினசரி வருமானம் சுமார் 5 கோடி ரூபாயாகும்  என்று அதிகாரி கூறினார்.

  ரயில் நிலையங்களில்  டிக்கெட் வழங்கத் தவறியதால், வேலை நிறுத்த நாட்களில் ஓடிய ரயில்களில் பயணம் செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். வேலைநிறுத்தம் தொடர்ந்தால் இழப்பு அதிகரிக்கும் என்றார்.  

No comments