Vettri

Breaking News

பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த உலகின் முத­லா­வது இஸ்லாமிய நபர்!!




 திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா நேற்று சனிக்கிழமை (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு இடையிலான 42 Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

நேற்று அதிகாலை 02.00 மணிக்கு நீந்தத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை நிறைவு செய்துள்ளார். பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது இஸ்லாமிய நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.

தரம் 10இல் கல்வி கற்கும் 15 வய­துடைய இவர், கடந்த மூன்று மாதங்­க­ளாக இச்சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்றார். கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில் நீந்திக் கடந்­துள்ளார்.  இவ­ருக்­கான நீச்சல் பயிற்­சி­களை விமா­னப்­படை கோப்ரல் றொசான் அபே­சுந்­தர வழங்கி வரு­கிறார்.

மேலும், கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த ஹரி­கரன் தன்­வந்­தை­யும் இவரே பயிற்­று­வித்­தி­ருந்தார். இலங்­கை­ய­ரான இள வய­தை­யு­டைய பஹ்மி ஹஸன் சலாமா இலங்கையின் விளை­யாட்டுத்துறை வர­லாற்­றில் தனது பெயரை பதிந்துகொள்­வ­தற்­காக தனது இலக்­கினை அடையும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார். அது­மட்­டு­மன்றி, திரு­கோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்­றி­யா­ள­ராக தெரிவாகியிருக்கிறார்.

பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத்துறைக்கு அப்பால் சென்று, தனது அர்ப்பணிப்புணர்வோடு நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

No comments