Vettri

Breaking News

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா




 


  புனித  அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலியானது  16.06.2024 ஞாயிற்றுக்கிழமை  காலை 7:30 மணிக்கு பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.


கடந்த 6 நாட்கள் மாலை வழிபாடுகள் இறைமக்களை தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக இறைமக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டது.


அதனை தொடர்ந்து  சனிக்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை ஆராதனை வழிபாடும்  இடம் பெற்றது.


இன்றைய திருவிழா திருப்பலியினைஅருட்தந்தை யூட் குயின்டஸ் அருட்தந்தை அடிகளார் தலைமைதாங்க  பங்குத்தந்தை சுலக்சன் அடிகளாரும் இணைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்து இறைவேண்டுதல் செய்திருந்தார்கள்.


திருப்பலி நிறைவில்  புனித  அந்தோனியார் திருச்சுருப பவனியானது ஆலயத்தை சுற்றி எடுத்துவரப்பட்டதுடன்  புனித அந்தோனியார் புகழ்பாக்கள் இசைக்கப்பட்டு கவிகள் இசைக்கப்பட்டு இறுதி செபத்துடன் புனித அந்தோனியார் திருச்சுருப ஆசீரை  பங்குத்தந்தை அருட்பணி  சுலக்சன்அடிகளார் இறைமக்களுக்கு வழங்கி வைத்தார்.


அத்தோடு பங்குத்தந்தை அவர்களினாலும்,   திருவிழா சிறப்பாக அமைய சகல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்ததோடு, திருவிழா வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது...


செய்தியாளர்

க.டினேஸ்


























No comments