Vettri

Breaking News

இந்திய மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் கைது!!




இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (17) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பில் படகொன்றிலிருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேர் அப்படகுடன், எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவர்களை கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments