Vettri

Breaking News

55 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு பிரதேசத்தில் நிலக்கடலை பதப்படுத்தும் நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!!




 நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் விவசாயிகளின் வாழ்விலும் புதிய மாற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.



விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் 55 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு தமிழ் கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்ப்பட்டது. நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டார். அதனையடுத்து விவசாயிலுக்கு ஜனாதிபதியால் மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.

இதேவேளை, மைலம்பாவலி – செங்கலடி பிரதேசத்தில் அமைந்துள்ள மாதுளை தோட்டத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முற்பகல் பார்வையிட்டார்.

இந்த மாதுளை தோட்டம் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருப்பதோடு, 300 விவசாயிகள் இந்தப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் கடந்த வருடம் அரை ஏக்கர் மாதுளை விளைச்சலில் 36 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தை ஈட்டியிருந்தனர்.

No comments