Vettri

Breaking News

திருமண ஆடை அலங்காரத்துடன் ஆசிரியர் நியமனத்தைப் பெற வந்த பெண்!!




 ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நேற்றையதினம் தனது திருமணப் பந்தத்திற்கு தயாரான இளம்பெண், திருமண ஆடை அலங்காரத்துடன் ஆசிரியர் நியமனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த திலினி என்ற பெண்ணே இவ்வாறு வருகை தந்திருந்தார். தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (30) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments