Vettri

Breaking News

பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம்!




 


வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை (Vattappalai) கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உற்சவமான பாக்குத்தெண்டல் உற்சவம் இன்று (06) அதிகாலை சிறப்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரம்பரிய வரலாற்று தொன்மைமிக்க ஆலயமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வை ஆலயத்துடன் தொடர்புடைய வீடுகளுக்குச் சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உற்சவமாக இந்த பாக்குத்தெண்டல் உற்சவம் அமைந்துள்ளது.

அந்தவகையில் இன்று (06) அதிகாலை 1.30 மணியளவில் முள்ளியவளை (Mulliyavalai) காட்டாவிநாயகர் ஆலயத்தில் மடைபரவி வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புடைய குடும்பங்களிடம் சென்று பாக்குத்தெண்டல் சம்பிரதாயம் நடைபெற்றுள்ளது.பாக்குத்தெண்டல் நடைபெற்று ஏழாவது நாளில் முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுத்து வந்து காட்டாவிநாயகர் ஆலயத்தில் அம்மன் சன்னிதானத்தில் உப்புநீரில் விளக்கேற்றி கண்ணகி அம்மனின் பொங்கல் ஆரம்பமாகின்றமை தொன்று தொட்டு முன்னெடுக்கப்பட்டுவரும் வழக்கமாக பார்க்கப்படுகிறது.

உப்பு நீரில் விளக்கெரியும்

அந்த வகையில் எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை கடல்நீர் தீர்த்தம் எடுத்தல் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து ஏழுநாட்கள் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் அம்மன் சன்னிதானத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு இடம்பெறும்.அதன்பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி காட்டாவிநாயகர் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் இடம்பெற்று 20ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments