Vettri

Breaking News

EAQ சமூக நலன்புரி அமைப்பின் ஒன்று கூடல் நிகழ்விற்கு ஏறாவூர் நகரசபை முன்னாள் தவிசாளர் நழிம் வாழ்த்து!!








எம்.எஸ்.எம். றசீன்

எமது ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்டு தொழிலின் நிமித்தம் கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வரும் எமது அன்பான உறவுகளின் அயராத முயற்சியால் அனைவரும் ஒன்றிணைந்து  எமது சமூகத்தின் துயரங்களை துடைத்தெரிய  உருவாக்கப்பட்ட EAQ அமைப்பின் மாபெரும் ஒன்று கூடல் இன்று கட்டார் நாட்டில் அபூ ஹமூர் மையவாடிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையையிட்டு  மகிழ்ச்சியடைகின்றேன். 


நாடு கடந்து குடும்பங்களை பிரிந்து தொழிலின் நிமித்தம் சென்று தங்களுடைய மாத சம்பளத்தில் ஒரு பகுதியினை எமது ஊரில் காணப்படும் ஏழை மக்களின்  வாழ்வாதாரம் மருத்துவ உதவி, கல்விக்கான உதவி என பல விடயங்களை கருத்திற் கொண்டு எமது ஊரிற்கு பல உதவிகளை செய்து வருகின்றார்கள்.


இவ்வாறு பல கவலைகளை மனதில் சுமந்து வெளிநாட்டில் கடமை புரியும் இவ்வாறான உறவுகள் இன்றைய சந்திப்பில் பல விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தங்களது கவலைகளை மறந்து ஒற்றுமையாக கூடி மகிழ ஒரு சந்தர்ப்பமாக அமையப் பெறவுள்ளது.


இந்நிகழ்வை ஏற்பாடு செய்த #EAQ அமைப்பினருக்கு எனது மனதார வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம் நழீம் தெரிவித்தார்

No comments