Vettri

Breaking News

ஏறாவூர் நகரசபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!!




 

























எம்.எஸ்.எம். றசீன் 


ஏறாவூர் நகரசபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் நகரசபையின் விசேட ஆணையாளர் எம்.எச்.எம்.ஹமீம் அவர்களின் தலைமையில் ஏறாவூர் நகரசபை பொது நூலக வளாகத்தில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இரஜாங்க அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகரசபையின் கணக்காளர் ஆர்.எப்.புஷ்ரா, ஏறாவூர் நகரசபையின் நிருவாக உத்தியோகத்தர் திருமதி நபீறா றசீன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ஏ.ஹாறூன் உட்பட ஏறாவூர் நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலையின் அதிபர்கள், மாணவர்கள் ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.


ஏறாவூர் நகரசபை பொது நூலகங்கள் இணைந்து தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பேச்சிப் போட்டி, கட்டுரைப் போட்டி, சித்திரப் போட்டி, வீட்டிற்கு ஓர் நூலகம் எனும் போட்டிகளில் கலந்து கொண்ட மற்றும்  வெற்றி பெற்றவர்கள்,  எமது நூலகங்களில் கடமை புரிந்து ஓய்வு பெற்றுச் சென்றவர்கள், நூலகங்களில் அர்ப்பணிப்போடு  கடமை புரிந்தவர்கள், ஆகியோருக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.



இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹாறூன், பிரதம அதிதி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர்  அல்ஹாஜ் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் ஏறாவூர் நகரசபை நூலகங்கள் இணைந்து பொன்னாடை போர்த்தி  நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

No comments