Vettri

Breaking News

பெரியநீலாவணையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!











செ.துஜியந்தன்


 பெரியநீலாவணையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  பெரியநீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆசிரியர் வி.கமலதாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி யோகேஸ்வரி இராமனாதன், பிரதி அதிபர் இ.தவராஜ், கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகர் சுபராஜன், ஆலோசகர் கொலின்ஸ், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிதி உதவியாளர் கிருபானந்தன், பாண்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் அருண்குமார், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ரவீந்திரன் உட்பட சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 120 மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது

No comments