Vettri

Breaking News

கோட்டைக்கல்லாறு தெற்கு சிறுவர் பூங்கா சிரமதானப்பணி முன்னெடுப்பு!!










மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் பூங்காவில். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசக்குழு மற்றும் கிராமியக் குழுவினர் இணைந்து சிரமதான பணியினை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.


மண்முனை தென் எருவில் பற்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் பிரதேசக்குழு இணைப்பாளருமான T. சுதாகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில். கட்சியின் கிராமியக்குழு தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments