Vettri

Breaking News

திருக்கோவில் பிரதேசத்தில் 26 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கி வைப்பு!!




 









திருக்கோவில் பிரதேசத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் யுத்தத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்காக 2023ம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு ரூபா 6 இலட்சம் மற்றும் 10 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கபடவுள்ளன.


அதன் முதல் கட்டமாக மூன்று வீடுகள் கடந்த புதன்கிழமை பிரதேச செயலாளர்.T.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் அவரின் அழைப்பின் பெயரில்  நேற்றைய முன்தினம் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ W.D வீரசிங்க ஆகியோர் எமது திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு மூன்று வீடுகளையும்  பயனாளிகளுக்கு கையளித்தார்.


இவ் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.S.நிருபா நிர்வாக உத்தியோகத்தர் திரு.T.மோகனராஜா கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர்  திரு.N.கந்தசாமி திட்டத்திற்கான கள உத்தியோகத்தர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,பயனாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


ஜே.கே.யதுர்ஷன்...

No comments