Vettri

Breaking News

சிவத்திரு சிவஸ்ரீ பிரமீன் ஐயா அவர்களது சிறப்பு சொற்பொழிவு மலேசியாவில்!!









அதன்படி 2024.01.20 (சனிக்கிழமை) இன்றைய நாளில் எமது அமைப்பின் தலைவர் சிவத்திரு சிவஸ்ரீ பிரமீன் ஐயா அவர்களது சிறப்பு சொற்பொழிவு மலேசியாவின் மலாக்கா, ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில் மலேசிய நேரப்படி இரவு 8 மணிக்கு இடம்பெற்றது.

இந்த மாதம் முழுவதும் தொடர் சொற்பொழிவுகள் எமது ஒன்றியத்தின் உறுப்பினர்களால் மலேசிய மண்ணின் பல ஆலயங்களில் இடம்பெறவுள்ளது.


கிழக்கு மாகாணம் கடந்து வடக்கு மற்றும் மலையக பகுதிகளில் கால்பதித்து தமது சொற்பொழிவுகள் மூலமாக சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் அளப்பரிய பணியில் ஈடுபட்டு வந்த கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம்  தன்னுடைய சமூகநலம் மிக்க இறைபணியின் பலனாக கடல் கடந்தும் இன்பத்தமிழ் கொண்டு இறைபணி ஆற்ற வாய்ப்பு கிடைத்தது.


இந்த வாய்ப்பினை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்திற்கு ஏற்படுத்தித் தந்த பேரன்புக்கும் பெருமதிப்புக்குரிய மலேசியா மலாக்கா நானிங் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயம், ஈப்போ குருவிமலை ஸ்ரீ செல்வ கணபதி ஆலயம் ஆகியவற்றின் குரு சிவஸ்ரீ கு. நவதாஸ சர்மா அவர்களுக்கு இதய பூர்வமான நன்றிகளையும், வாழ்த்துகளையும் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

No comments