Vettri

Breaking News

சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் -பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்பு!!




 சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தல்


இனிமேல் சிவில் உடை அணிந்து வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் பணியில் ஈடுபட முடியாது என பதில் பொலிஸ் மா அதிபர்


பணிப்புரை விடுத்துள்ளார்.


லொறி ஒன்றை நிறுத்தாமல் சென்றமைக்கு  கடந்த 18 ஆம் திகதி  நாரம்மலயில்  சிவில் உடையில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் லொறி சாரதி ஒருவர் கொல்லப்பட்டார். இச் சம்பவத்தையடுத்துகொலை செய்தமைக்காக கைது செய்யப்பட்ட உப பொலிஸ் அத்தியட்சகர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


இவ்வாறான நிலையில் தற்போது பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments