Vettri

Breaking News

இன்றைய வானிலை !!




 கிழக்கு  மற்றும் தென்  மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி  மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை


குறித்து மேலும் கூறுகையில்,

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். நாட்டின் அனேகமான மாகாணங்களில்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத்  திசையில்  இருந்து  காற்று வீசும். 

கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும் என்றார்.

No comments