Vettri

Breaking News

யாழில் மாவா பாக்குடன் பெண் கைது!




 


யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த சந்தேகத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், துன்னாலை கிழக்கை சேர்ந்த குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்ததுடன் அவரது  உடைமையில் இருந்து ஒரு தொகை கஞ்சா கலந்த மாவா பாக்கையும் கைப்பற்றினர்.  

கைது செய்யப்பட்ட பெண்ணை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments