தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது!!
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது....
இந்துமா சமுத்திரத்தின் முத்தாம் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பழம்பெரும் பதியாம் தம்பிலுவில் கிராமத்தில் பல நெடுங்காலமாய் கோயில் கொண்டு வீற்றிருந்து நாடிவரும் அடியவர்களுக்கு அருள்பாலித்து வரும் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது....
இவ் நிகழ்வானது 2024/01/21 திகதி அதாவது இன்று காலை 07.21 மணி முதல் 08.03மணி வரையுள்ள மகரலக்கின சுப முகூர்த்தத்த வேளையில் பக்த அடியவர்கள் புடைசூழ அரோகரா கோஷத்துடன் மிக சிறப்பாக இடம்பெற்றது.....
பாலஸ்தாபன குடமுழக்கு கிரியைகள்யாவும் கலாபூஷணம் சைவப்புலவர் சைவசித்தாந்த பண்டிதர் சோதிடர சிவஸ்ரீ க. லோகநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது....சாதகாசிரியராக
சிவாச்சாரியர் சிவஸ்ரீ க.சிவக்குமார் குருக்கள் ஸ்ரீ கதிரவேலாயும் சுவாமி ஆலயம்-மட்டுநகர் மற்றும் இவ் நிகழ்வில் ஆலய பிரதமகுரு
சக்தி பூஜா துரந்தரர் சாகரர், சக்தி உபாசகர் ஸ்ரீமான் சிவத்திரு க.தங்கத்துரை (கப்புகனார்) (பிரதமகுரு -ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம்-தம்பிலுவில்) அவர்களுடன் ஈசான சிவதாசர், பூஜா சுடர். சக்தி உபாசகர்
சிவத்திரு ச. டினசீலன் (கப்புகனார்) ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம்-தம்பிலுவில்) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் விநாயகபுரம்) ஆகியோர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்....
ஜே .கே.யதுர்ஷன்...
தம்பிலுவில்
No comments