Vettri

Breaking News

943 சந்தேக நபர்கள் கைது !





 நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 943 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 9 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 25 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில், ஐஸ் ரக போதைப்பொருள், ஹெரோயின், கேரள கஞ்சா உள்ளிட்ட பல போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

No comments